Home இலங்கை தொலைபேசியை பறித்துகொண்டு தப்ப முயன்ற வெளிநாட்டவர்! கொள்ளுப்பிட்டில் பரபரப்பு

தொலைபேசியை பறித்துகொண்டு தப்ப முயன்ற வெளிநாட்டவர்! கொள்ளுப்பிட்டில் பரபரப்பு

0
image

கொழும்பு – கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்ததாவது, சந்தேகநபர் வீதியில் சென்ற ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

எனினும், அவரை துரத்திச் சென்ற உள்ளூர் நபர் ஒருவர் பிடித்து, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்து நிற்கும் காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது. 

Source: https://samugammedia.com/foreigner-who-tried-to-escape-after-snatching-a-mobile-phone-commotion-at-the-police-station-1786086351

NO COMMENTS

Exit mobile version