நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று 28ஆம் திகதி இரவு 9 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கன மழையுடனான காலநிலை காரணமாக கினிக்கத்தேன முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
கனமழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது மவுசாக்கலை கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை காசல்ரீ ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது.
அதிகளவில் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு மற்றும் வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டிச் செல்லுமாறு நுவரெலியா மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல வீதிகள் வழுக்கும் தன்மை காணப்படுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் போது வாகனங்கள் மிகவும் அவதானமாக செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
