Home முக்கியச் செய்திகள் நைட் ‘டீ’ விலை எகிறும்

நைட் ‘டீ’ விலை எகிறும்

0

 

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் இன்று (20) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகம் மற்றும் தேநீர்க்கடை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் இயக்கச் செலவுகள்  அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இன்று முதல் பால் தேநீரின் விலை அதிகரிப்பை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் திருத்தப்பட்ட விலைகள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

 

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/150-377409

NO COMMENTS

Exit mobile version