Home இலங்கை பசிபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மீண்டும் அடைமழை பெய்யும் சாத்தியம்!

பசிபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மீண்டும் அடைமழை பெய்யும் சாத்தியம்!

0
image

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நிலைமை நாளை (04) நண்பகல் முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே, தற்போதைய கொந்தளிப்பான வானிலை நாளை நண்பகலுக்குப் பின்னர் தளரத் தொடங்கும் என்று கூறினார்.

எனினும், பசிபிக் பெருங்கடலில் ஜப்பானின் தெற்குப் பகுதியில் தற்போது உருவாகி வரும் சூறாவளி காரணமாக, ஆகஸ்ட் 6-ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் மீண்டும் மழை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் தாக்கத்தால் காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடும் என்றும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதிகளவு மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/cyclone-in-the-pacific-ocean-possibility-of-heavy-rains-in-sri-lanka-again-1785762052

NO COMMENTS

Exit mobile version