Home இலங்கை புழுக்கள், பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்! மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்

புழுக்கள், பூஞ்சணம் பிடித்த பிஸ்கட்! மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்

0
image

 மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட் பொதிகள் பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பலசரக்குக் கடையொன்றில் குறித்த பிஸ்கட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (07) களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிஸ்கட்டை உற்பத்தி செய்தவர், விநியோகம் செய்தவர் மற்றும் விற்பனை செய்தவர் ஆகியோருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்ததுடன், 46,000 ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குறித்த தொகுதி இலக்கத்தைக் கொண்ட அனைத்து பிஸ்கட் பொதிகளையும் விநியோகம் செய்யப்பட்டுள்ள அனைத்து கடைகளிலிருந்தும் உடனடியாக மீளப் பெற்று அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/worms-moldy-biscuit-shocking-incident-in-batticaloa-1786093898

NO COMMENTS

Exit mobile version