Home இலங்கை மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை – சிறப்பு அடையாள அட்டைகள் விரைவில் அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை – சிறப்பு அடையாள அட்டைகள் விரைவில் அறிமுகம்

0
image

அரச நிறுவனங்களில் சேவைகளைப் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில், சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற தேசிய சபை கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் மூலம் அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் விரைவாகவும் சிரமமின்றியும் சேவைகளைப் பெறும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாற்றுத்திறனாளிகளை குறிப்பிடும் போது பயன்படுத்தப்பட வேண்டிய பொருத்தமான மற்றும் மரியாதையான சொற்களஞ்சியத்தை, உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து தயாரித்து வெளியிடவும் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

Source: https://samugammedia.com/priority-service-for-people-with-disabilities–special-id-cards-coming-soon-1782879920

NO COMMENTS

Exit mobile version