அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மீனவ சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சனைகள், ஏனைய தொழில்சார் அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் படுகின்ன துன்பங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக மீனவர்களுடன் சந்திப்பு நடாத்துவது குறித்தும் பேசப்பட்டது.
இதில் குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த அமைப்பானது ஸ்தாபிக்கப்பட்டு தேசிய ரீதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/important-discussion-held-in-jaffna—research-on-various-issues-1780744472
