யாழ்ப்பாணம், அத்தியடிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய துரைராசா புஸ்பநாதன் என்பவர் இரசாயனப் திரவத்தை அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான இவர், வீட்டிலிருந்த கல்சியம் நீக்கி திரவத்தைக் குடித்துள்ளார்.
இரசாயனத்தை அருந்தியதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மீட்புக் குழுவினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றைய தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணைகளை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளதோடு, மரணத்திற்கான மேலதிக பின்னணிகள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
