சிலாபத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்புவத்தை மற்றும் கந்தானை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே கடவையில் இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/two-people-died-after-a-three-wheeler-collided-with-a-train-1780982480
