யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியின் மருதன்கடவலை, மிதிவத்த பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பொலிஸார் தெரிவித்ததாவது, கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து, வீதியின் வலதுபுறமாகத் திரும்ப முயன்ற லொறியின் பின்புறத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்த நிலையில், கெகிராவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதன்கடவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்து இடம்பெற்ற தருணத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சி தரும் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Source: https://samugammedia.com/luxury-bus-collides-with-lorry-chaos-on-jaffnakandy-a9-road-1784617933
