Home இலங்கை வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!

வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!

0
image

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில்  நேற்று (11)இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க, கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால,

நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், முப்படைகளின் தளபதிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/special-discussion-in-the-parliament-complex-to-free-the-lands-owned-by-the-military-in-the-north-1789182122

NO COMMENTS

Exit mobile version