Home இலங்கை அரசியல் வடக்கில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக குவியும் மக்கள்!

வடக்கில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக குவியும் மக்கள்!

0

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருக்கும் நிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வட மாகாணத்திலேயே பெருகிய வண்ணம் உள்ளது.

குறிப்பாக, இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பிரசாரங்களிலும் சரி தேர்தல் பரப்புரைகளின் போது மக்களிடையே பொது வேட்பாளருக்கான ஆதரவு கூடிக் கொண்டே செல்கின்றது.

அந்தவகையில், வடக்கு மாகாணத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மக்களுடனான கருத்து பகிர்வுகளின்படி தமிழ் தேசிய மக்களினுடைய திரட்சியை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்களினுடைய உணர்வு என்றுமே மங்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் நாம் தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கினை அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாட்டை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதற்காக தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்கை அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…   

NO COMMENTS

Exit mobile version