Home இலங்கை வருமானத்தை நிரூபிக்க முடியாத பெருந்தொகை பணத்துடன் கொழும்பில் இருவர் கைது

வருமானத்தை நிரூபிக்க முடியாத பெருந்தொகை பணத்துடன் கொழும்பில் இருவர் கைது

0
image

சம்பாதித்த விதத்தை உறுதிப்படுத்த முடியாத  2 கோடியே 70 இலட்சம் ரூபா பணத்துடன் இரு சந்தேகநபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (21) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காரொன்றில் கொண்டு செல்லப்பட்டிருந்த குறித்த பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 13 மற்றும் 14 பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பணம் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டதா என்பது தொடர்பில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-people-arrested-in-colombo-with-a-large-sum-of-money-they-couldnt-prove-the-source-of-1784696931

NO COMMENTS

Exit mobile version