வாடகைத் தொகையை செலுத்தத் தவறிய 10 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை ஹட்டன்–டிக்கோயா நகராட்சி மன்றம் இன்று (14) முன்னெடுத்துள்ளது.
ஹட்டன்–டிக்கோயா நகராட்சி மன்றத்துக்குச் செலுத்த வேண்டிய வாடகைத் தொகையை நீண்டகாலமாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த கடைகளுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நகராட்சி மன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடை உரிமையாளர்களிடம் நிலுவையிலுள்ள வாடகைப் பணத்தை செலுத்துமாறு பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தப்பட்ட போதிலும், உரிய முறையில் பணம் செலுத்தப்படவில்லை எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நகராட்சி மன்றத்துக்கு பெருமளவான வாடகைப் பாக்கி ஏற்பட்டுள்ள நிலையில், நிலுவைத் தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/crackdown-in-hatton-10-shops-sealed-for-non-payment-of-rent-1789398537
