Home இலங்கை சமூகம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: வெளியான அதிரடி அறிவிப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: வெளியான அதிரடி அறிவிப்பு

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன் போது, பரீட்சையின் முதல் தாளில் கசிந்த மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு

இந்த நிலையில், நடந்து முடிந்த  தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கசிந்த மூன்று வினாக்களுக்கும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

குறித்த தீர்மானமானது, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட 07 பேர் கொண்ட குழு முன்வைத்த பரிந்துரையில் கீழ் எடுக்கப்பட்டது.

எனினும், பரீட்சையின் வினாத்தாள்கள் கசிந்த விடயம் தொடர்பில் அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தினர்.

மீண்டும் பரீட்சை

அதன் போது, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தற்பொழுது பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானத்தில் எதுவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version