இலங்கை இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலர் 507 மில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடிந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியதாவது,“இலங்கை மாதம் தோறும் சுமார் 600 மில்லியன் டொலர் பணப்பரிமாற்றமாக (remittance) பெறுகிறது.
இருதரப்பு கடன்கள்
நாட்டின் பொருளாதாரம் தற்போது நிலைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது. வருவாய் இலக்குகள் அடையப்படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”என்றார்.
மேலும், இருதரப்பு கடன்கள் (bilateral debts) மறுசீரமைப்பு விரைவில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
