Home இலங்கை குற்றம் கொழும்பில் வேன் ஒன்றிலிருந்து கோடிக்கணக்கான பணம் மாயம்

கொழும்பில் வேன் ஒன்றிலிருந்து கோடிக்கணக்கான பணம் மாயம்

0

கொழும்பு, பம்பலப்பிட்டியில் ஒரு பணப் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான வேனில் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன பணப் பையில் 1396,000 ரூபாய் இருந்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 390,000 ரூபாய் மதிப்புள்ள 1300 அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் மாயம்

வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version