Home இலங்கை 10 அடி பள்ளத்தில் பாய்ந்த யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்! நித்திரைக் கலக்கத்தால் விபரீதம்

10 அடி பள்ளத்தில் பாய்ந்த யாழிலிருந்து சுற்றுலா சென்ற கார்! நித்திரைக் கலக்கத்தால் விபரீதம்

0
image

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த இருவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், கார் பலத்த சேதமடைந்துள்ளது.

ஹட்டன் வலய தலைமை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரவின் பணிப்புரையின் பேரில், ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-car-went-on-a-tour-from-a-10-foot-pond-in-jaffna-disaster-due-to-drowsy-driving-1788343135

NO COMMENTS

Exit mobile version