Home இலங்கை சமூகம் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது

0

இலங்கைக் (Sri Lanka) கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 12 பேர் கடற்படையினரால் (Sri Lanka Navy) கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (26.10.2024) இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாம்

யாழ் (Jaffna) – பருத்தித்துறையை (Point Pedro) அண்மித்த கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்திய ட்ரோலர் படகும் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான 12கடற்றொழிலாளர்களும் மயிலிட்டியில் வைத்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
 

NO COMMENTS

Exit mobile version