Home முக்கியச் செய்திகள் யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து பாடசாலை மாணவன் உயிர்மாய்ப்பு!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கரவெட்டி – மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் என்ற வயது 14 மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

காவல்துறையினர் விசாரணை 

உயிரிழந்த குறித்த மாணவன் யா/ கரவெட்டி இருதயக்கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்று வந்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த மாணவன் நேற்றைய தினம் (07) இரவு 7:30 மணியளவில் தனது வீட்டில் தவறான முடிவெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி – கஜிந்தன்

NO COMMENTS

Exit mobile version