Home முக்கியச் செய்திகள் கனடாவில் துப்பாக்கி சூடு : பதினாறு வயது சிறுவன் பலி

கனடாவில் துப்பாக்கி சூடு : பதினாறு வயது சிறுவன் பலி

0

கனடாவின் (Canada) ஸ்காப்ரோவில் (Scarborough) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது பிளைன்டோவர் பிளாசாவில் வாகன தரிப்பிட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிசிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டொரன்டோவில் படுகொலை

இதனடிப்படையில், இந்த ஆண்டில் டொரன்டோவில் (Toronto) படுகொலை செய்யப்பட்ட 37 ஆவது நபர் இந்த சிறுவன் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version