Home இலங்கை சமூகம் காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னாரில் 16 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னாரில் 16 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

0

மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக 16 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.

செல்வநகர் கிராம
மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பல்வேறு வாசகங்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை
ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (18) திங்கள் மாலை இடம் பெறவுள்ள விசேட
சந்திப்பின் போது ஜனாதிபதி மன்னார் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு வழங்க
வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version