Home முக்கியச் செய்திகள் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு

தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு

0

பதுளையிலுள்ள (Badulla) தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறி சென்ற இரு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயதுடைய மாணவி ஒருவரே மஹியங்கனை – லொக்கலோ ஓயாவிலிருந்து இன்று (21.10.2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை

குறித்த மாணவிகள் இருவரும், ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவரும் நிலையில், பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்வதற்காக நேற்று (20) காலை வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.

எனினும், அந்த மாணவிகள் இருவரும் வீடு திரும்பாத நிலையில், அவர்களது பெற்றோர் பதுளை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் ஒரு மாணவி நேற்று (20) இரவு அதாவுல்பத்த, லொக்கலோ வீதியில் கண்டுபிடிக்கப்பட்டு ரிதிமாலியத்த காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய மாணவி இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version