யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் 18 வயது
இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 10 கிராம் 670 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை போதை தடுப்பு பிரிவினரால் இன்றையதினம்(11) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
