Home இலங்கை சமூகம் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

0

செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில்
படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

முல்லைத்தீவு –வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த
மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.

நினைவேந்தல் நிகழ்வு 

படுகொலை செய்யப்பட்டவர்களது 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற
இடத்தில் அதே நேரத்தில் இன்றையதினம் (14) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது. 

குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்,
முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசன் மற்றும்
சமூக செயற்ப்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து
கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

https://www.youtube.com/embed/aJLYEBouEuo

NO COMMENTS

Exit mobile version