Home முக்கியச் செய்திகள் யாழில் மாணவன் உட்பட இருவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!

யாழில் மாணவன் உட்பட இருவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!

0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவன் ஒருவரும் குடும்பஸ்தர் ஒருவரும்  திடீரென உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் யாழ் – சுன்னாகத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, மாணவன் ஒருவர் நேற்றையதினம்(28) திடீரென உயிரிழந்துள்ளார்.

 சுப்பிரமணியம் வீதி,
கந்தரோடை, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறீதரன் சுஜிதரன் (வயது 19) என்ற மாணவனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சி

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

இதன்போது,மிகைப்படுத்தப்பட்ட இதயத்தசை வளர்ச்சியாலேயே குறித்த மரணம்
நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று
பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை மக்கள் புகைபிடிக்க நாளொன்றுக்கு செலவிடும் தொகை தெரியுமா..!

 மயங்கி விழுந்து உயிரிழப்பு

அதேவேளை,கொழும்பில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம்(29) காங்கேசன்துறை நடேஸ்வரா
கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து
உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கொட்டகனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர்
சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் சோகம்: மின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version