பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இரு சடலங்களும் இன்றையதினம் (31) பசறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எவ்வித காயங்களும் இல்லை
28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
