Home இலங்கை குற்றம் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது

லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டில் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் கைது

0

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் திணைக்களத்தின் விசேட புலனாய்வாளர்கள் இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(25.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை

கள்ளச்சாராய வர்த்தகர்களிம் இருந்து 2000 ரூபாய் இலஞ்சமாக பெற முயன்றபோதே
குறித்த இருவரும் கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பண் சேனை , சிலுக்குடியாறு பகுதியில்
கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபடுபவர்களிடம் வாரத்திற்கு ஒருமுறை இலஞ்சம்
வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றையதினம்(25) கொக்கட்டிச்சோலை நகரில் வைத்து
இலஞ்சம் வாக்கும் போது, அங்கு மாறுவேடத்திலிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை இன்றைய தினம் (26) மட்டக்களப்பு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக கொழுப்பு
கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல் – அனாதி

NO COMMENTS

Exit mobile version