Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்

நுவரெலியாவில் ஜனாதிபதியின் வெற்றியை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்

0

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமையை முன்னிட்டு நுவரெலியாவில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல், நேற்றையதினம் (25.09.2024) இடம்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு
நுவரெலியா பிரதான நகரில் பேல் பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய மக்கள்
சக்தியின் கிளையில் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வெற்றிக் கொண்டாட்டமும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உடனடி தீர்வு

இதன்போது, கட்சி ஆதரவாளர்கள், வருகை தந்த பொதுமக்களுக்கு பால் சோறும் இனிப்பு பண்டங்களும் வழங்கி
தமது வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.

இதன்போது, நுவரெலியா மாவட்டத்திலுள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு
உடனடி தீர்வு வழங்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version