Home இலங்கை சமூகம் கோர விபத்தில் பலியான இளம் தம்பதி

கோர விபத்தில் பலியான இளம் தம்பதி

0

அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இன்று(25) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி இருவரும் பயணித்த நிலையில், பிடபெத்தரவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சொகுசு வானில் அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள்

உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய வர்த்தகரான சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

பாக்யாவின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கும், இந்திகவின் சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த பாக்யா கர்ப்பமாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version