Home இலங்கை சமூகம் யாழில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் வசமாக சிக்கிய இருவர்

யாழில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் வசமாக சிக்கிய இருவர்

0

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம்
பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு இணுவில் தியேட்டரடியில் வைத்து
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கஞ்சா மீட்பு

இதன்போது அவர்களிடமிருந்து 9.794 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதிகள்
மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில்
கையளிக்கப்பட்டுள்ளனர். 

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version