யாழில் (Jaffna) அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் நான்கு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படகினை பறிமுதல்
சட்டவிரோதமான முறையில்
நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்
ஈடுபட்ட நான்கு கடற்றொழிலாளர்களையும் கைது செய்த கடற்படையினர் அவர்களின்
படகினையும் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கடற்படையினர் அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
