Home இலங்கை அரசியல் கொழும்பிலும் சொல்லியடிக்கும் அநுர குமார

கொழும்பிலும் சொல்லியடிக்கும் அநுர குமார

0

புதிய இணைப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் பொரளை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 17,290 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 15,497வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10,188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,101வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 20,864 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,645 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,080 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 561வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 552 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

NO COMMENTS

Exit mobile version