Home இலங்கை சமூகம் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்ப திகதி அறிவிப்பு

0

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

 

வேட்புமனுக்கள் ஏற்கும் பணி

அந்த தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம்  திகதி நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

அதன்படி, ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நானூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் நவம்பர் 14ஆம் திகதி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

 

 

Source: https://tamilwin.com/article/2024-parliment-election-postal-vote-1727531808

NO COMMENTS

Exit mobile version