தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நான் தான். இது கட்சி
எடுத்த ஒருமித்த முடிவு. இதில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல்
ஊடாக ஆளும் அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
.”ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்கின்றேன். பொதுத் தேர்தலை
எதிர்கொள்வதற்குத் தயாராகி வருகின்றோம்.
ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே பயணம்
தொடரும். முற்போக்கு சக்திகள் எம்முடன் கைகோர்க்கலாம்.” – என்றும் தெரிவித்துள்ளார்.