Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

நுவரெலியாவில் தன்னை நிலைநாட்டிய சஜித் : வெளியானது இறுதி தேர்தல் முடிவுகள்

0

புதிய இணைப்பு 

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் இறுதி வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 201, 814 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 138,619 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 105,057வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 8,821 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

நான்காவது இணைப்பு 

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கிழக்கு மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 117,232 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 91,005 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 38,416 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,689 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

மூன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 27, 043 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

யாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 18, 250 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17, 727 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 458 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 


இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 29,896வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 17,074வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 15,140வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,008 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,087வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,334 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 308 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் வெளியாகியுள்ள தபால் மூல வாக்கு முடிவுகள்…


https://www.youtube.com/embed/PGFtLqq_ZpE

Source: https://ibctamil.com/article/2024-sri-lanka-election-nuwara-eliya-results-1726953394

NO COMMENTS

Exit mobile version