Home முக்கியச் செய்திகள் 2025 செலவு திட்டம்: நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

2025 செலவு திட்டம்: நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விடயத்தினை நிதியமைச்சு(Ministry of Finance) தெரிவித்துள்ளது.

இதற்காக அரச நிறுவனங்களின் வரவுசெலவுத்திட்ட அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத்திட்டம்

அதற்கமைய மதிப்பீட்டு அறிக்கைகளை கோரும் நடவடிக்கைகளும் அதே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படுமென நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2025 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் நீக்கி அந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை அதிபர் நியமித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version