Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

0

புதிய இணைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 மணிவரை ஆட்சேபனைகளை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமானது.

கட்டுப்பணம் செலுத்தல்

இந்த நிலையில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையும் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.

அத்துடன் பூநகரி, மன்னார், மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/YLJtPvqKhdc

NO COMMENTS

Exit mobile version