Home இலங்கை சமூகம் 2025 – Mrs உலக அழகிப் போட்டி: இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்

2025 – Mrs உலக அழகிப் போட்டி: இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்

0

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமணமான உலக அழகிப் போட்டியில்(Mrs. World ) இலங்கையைச் சேர்ந்த பெண் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்போது, இஷாதி அமந்தா(Ishadi Amanda) என்ற பெண்ணே திருமணமான உலக அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae வென்றுள்ளார்.

மூன்றாவது இடம்

மேலும், தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூட்டப்பட்டார்.

இதன் காரணமாக, திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version