Home இலங்கை பொருளாதாரம் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

0

ஆட்டிசம் மற்றும் பிற சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்கும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களை வலுப்படுத்த ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பராமரிப்பு மையங்கள்  

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.    

அதேவேளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபா 5,000 கல்வி உதவி வழங்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இந்த குழந்தைகள் பொது கல்வியில் இணைக்கப்படுவதை ஊக்குவிக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

NO COMMENTS

Exit mobile version