இணையம் மூலமான சூதாட்ட மோசடி தொடர்பாக 21 இந்தியர்கள், இலங்கையில் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின்
அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போதே அவர்கள் 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்தியர்கள்
கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவர்கள் இந்த மோசடியை நடத்தி
வந்துள்ளனர்.
சுற்றுலா விசாக்களில் இலங்கைக்குள் வந்து, வீசா காலாவதியானபோதும், அவர்கள்
நாட்டுக்கு திரும்பிச்செல்லாமல், இலங்கையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்று
குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அவர்களை உடனடியாக நாடு கடத்தும் செயற்பாடுகள்
மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
