Home இலங்கை அரசியல் தேர்தல் சட்டங்களை மீறிய 22 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 22 பேர் கைது

0

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

54 முறைப்பாடுகள் 

கடந்த ஜுலை 26ம் திகதி முதல் இதுவரை காலமும் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் பொலிஸாருக்கு 163 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 119 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் என்ற வகையீட்டில் உள்ளடக்கப்படக்கூடிய 54 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version