யாழ்ப்பாணத்தில் (jaffna) உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (07.07.2025) யாழ்ப்பாணம் – குருநகர் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
சந்தேகத்திற்கு இடமான முறையில்
நடமாடிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90
மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மூவரையும் கைது செய்ய காவல்துறையினர், அவர்களை குருநகர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
[NLDRSFU
]
https://www.youtube.com/embed/8cHezgXb5vM
