Home முக்கியச் செய்திகள் யாழ். திருநெல்வேலி பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் – சிக்கிய 3 சந்தேக நபர்கள்

யாழ். திருநெல்வேலி பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் – சிக்கிய 3 சந்தேக நபர்கள்

0

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.10.2025) யாழ் நகர் (Jaffna town) பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த வியாபார நிலையத்தில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான
பொருட்களை திருடிய குறித்த சந்தேகநபர் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை 

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம்
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version