Home இலங்கை குற்றம் மன்னாரில் பீடி இலை பொதிகளுடன் 3 பேர் கைது

மன்னாரில் பீடி இலை பொதிகளுடன் 3 பேர் கைது

0

மன்னார் (Mannar) வங்காலை கடற்கரை பகுதியில் பீடி இலை பொதிகளுடன் 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு
பிரிவு பொலிஸார் இன்று திங்கட்கிழமை (08.07.2024) மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினரின் தகவல்

வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப்படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், வங்காலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும் மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

Source: https://tamilwin.com/article/3-arrested-with-beedi-leaf-packs-in-mannar-1720424898

NO COMMENTS

Exit mobile version