Home தொழில்நுட்பம் பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்: நாசா அறிவிப்பு

பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்: நாசா அறிவிப்பு

0

பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா(NASA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாசா நிறுவனம்,

“பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

2024 டிபி2

அதன்படி 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த முதல் விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 இலட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது.

இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சினை காரணமாக அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இரண்டாவது விண்கல் 2007 யூடி3 என்று பெயிரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 42 இலட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.

ஆனால் 3ஆவது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த மூன்றாவது விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.

விண்கற்கள் பாதை

பூமியிலிருந்து சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது.

இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால்,

அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும்.

மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல் 1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. 

ஆனால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லையென்பதால் எந்த பாதிப்புமில்லை.” என தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version