Home இலங்கை சமூகம் நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம்

நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம்

0

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் 30 ஆம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(09) புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ்
தேவாலயத்தில் நடைபெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி
அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கை

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான
தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward )
எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி
இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ
கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த மக்கள் கொன்று குவிப்பு

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள்
தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த
இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர்
காயமடைந்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version