Home இலங்கை குற்றம் இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள்

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை கடற்படையினர், 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 333 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் 11 இந்தியர்களின் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

சட்ட நடவடிக்கை

இந்த இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன்,  மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கையின் கடற்படை உறுப்பினர் ஒருவரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் மரணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version