Home இலங்கை அரசியல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ள தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ள தேர்தல் முறைப்பாடுகள்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 337 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில், 5,551 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளது.

அவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான பெறப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் 

இதற்கிடையில், இதுவரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 4,929 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களிற்குள் 35 தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் தெரிவித்துள்ளது.

அதன்படி தேர்தல் சட்டங்களிற்கு மாறான பிரச்சாரங்கள் மற்றும் வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த முயலும் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளதாக பெவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஒரு தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

Source: https://ibctamil.com/article/337-new-election-complaints-in-24-hours-1726905947

NO COMMENTS

Exit mobile version