அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், அனர்த்தம் காரணமாக நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5,325 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,815 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
13,422 வீடுகள் பகுதியளவு சேதம்
இரண்டாவது இடத்தில் நுவரெலியா மாவட்டம் உள்ளது, 767 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் 476 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 415 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 404 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகளும் பேரழிவால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பேரழிவால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன(13,422 வீடுகள்).
பகுதியளவு சேதமடைந்த வீடுகளில், கேகாலை மாவட்டத்தில் 11,601 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 7,869 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 7,291 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 5,830 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 4,809 வீடுகளும், வவுனியா மாவட்டத்தில் 4,135 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 3,742 வீடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 3,600 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,526 வீடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 2,249 வீடுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
